இந்தியா

வீட்டு வாசலுக்கு வரும் சுவையான வீட்டு உணவு.. ஜொமைட்டாவின் புதிய முயற்சி..!

Published

on

உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ சுவையான வீட்டு உணவை சுடச்சுட வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து கொடுக்கும் புதிய சேவையை தொடங்கி உள்ளது.

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு புது புது வசதிகளை செய்து அசத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ தற்போது என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.


இது வீட்டு சமையல்காரர்கள் உடன் வடிவமைக்கப்பட்ட புதிய வீட்டு உணவுகளை போன்று இருக்கும் என்றும் மலிவு விலையில் இந்த உணவு சுடச்சுட வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் செய்யப்படும் உணவை போன்ற சுவையான கைப்பக்குவத்தில் தயாராகும் இந்த உணவின் விலை ரூபாய் 89 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குருகிராமில் முதல் கட்டமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படும் மலிவு விலை உணவை சாப்பிட்டு அனுபவியுங்கள் என்றும் உண்மையான வீட்டு சமையல்காரர்களால் தயாரிக்கப்படும் இந்த மெனுக்கள் நிச்சயம் உங்களை கவரும் என்றும் ஜொமேட்டோ சி.இ.ஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் உடல் நிலை பாதிக்கப்படும் என்ற கருத்து பலருக்கும் இருப்பதை அடுத்து வீட்டு சமையல் காரர்களுடன் இணைந்து ஆரோக்கியமான உணவை தயார் செய்கிறோம் என்றும் புதுப்புது வகையான மெனுவை தயாரிக்க வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆர்டர் கிடைத்தவுடன் அந்த உணவை சூடாக மற்றும் சுவையாக வீட்டின் சுவையில் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் ஜொமேட்டோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய சந்தையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்றும் எங்கள் உணவு பங்காளிகள் வீட்டு சமையல்காரர்களுடன் இணைந்து ஒவ்வொரு உணவு வகைகளையும் அன்புடனும் அக்கறையுடனும் சமைத்து வருகிறார்கள் என்றும் விலையும் மிகவும் குறைவு என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் வீட்டு பாணியில் ஆரோக்கியமான உணவை நாங்கள் வழங்குகிறோம் என்றும் சிறந்த பொருள்களை மட்டுமே உணவு தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம் என்றும் இது சுவையானது மட்டுமின்றி உடல் நிலைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் குருகிராமில் முயற்சி செய்யப்படும் இந்த சேவை படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version