தமிழ்நாடு

ஜிகா வைரஸ் பரவல்: தமிழ்நாடு – கேரள எல்லையில் பரிசோதனை

Published

on

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் இந்த வரைஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிகா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஜிகா வைரஸ் என்பது பகலில் துடிப்பாக இருக்கும் கொசுக்கள் வாயிலாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும் பிசிபிக் தீவுகளில் இந்த வைரஸ் தொற்று கடந்த காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிதாக எந்த அறிகுறிகளும் இருக்காது, ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது பிறக்கப் போகும் சிசுக்களை பாதிக்கும் எனப்படுகிறது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது சுமார் 1,500 குழந்தைகள் ஜிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பிறந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2017 ஆண்டில் அகமதாபாத் மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘கேரள – தமிழ்நாடு எல்லை சந்திக்கிற 2,660 வீடுகளில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் மக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல பேருந்து, ரயில் மற்றும் லாரிகளில் வருவோரிடமும் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version