இந்தியா
இன்று ஒரே நாளில் 30 பேர்களுக்கு ஜிகா வைரஸ்: அதிர்ச்சி தகவல்
இன்று ஒரே நாளில் முப்பது பேர்களுக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் குறைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஜிகா வைரஸ், டெங்கு வைரஸ் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே ஒரு சிலருக்கு ஜிகா வைரஸ் பரவி இருந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் அறுபத்தி ஆறு பேருக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் மேலும் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க மாநில சுகாதாரத்துறை ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.