டிவி

செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறினார் கார்த்திக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஜீ தமிழ்!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபல செம்பருத்தி சீரியலில், ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் விலகியுள்ளார்.

செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபான ஷாஜகான் இருவருக்கும் என்றே பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் நடித்து வந்த ஜனனி அஷோக் குமார் திடீரென நீக்கப்பட்டார். இப்போது கார்த்திக் ராஜ் வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவனம், “எங்களது நிகழ்ச்சிகளை வெற்றியாக்கி வரும் எங்களது பார்வையாளர்களுக்கு ஜீ தமிழ் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. செம்பருத்தி தொடரில் தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடை வைத்த நடிகர் கார்த்திக் ராஜுக்கு நன்றி.

இவ்வளவு காலம் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில தவிர்க முடியாத காரணங்களுக்காக அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஜீ தமிழ் மற்றும் ஜீ 5-ல் அவரது பங்களிப்பு வருங்காலத்தில் தொடரும். அவரது எதிர்கால வெற்றிக்கு எங்களது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version