கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்!

Published

on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங்.

அதிரடி கிரிக்கெட் ஆட்டத்திற்கு பேர் போன யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை போட்டியில் முக்கிய பங்கை ஆற்றினார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த விளையாட்டு வீரர் என்ற பெருமையும் இவருக்கு சொந்தமாகும்.

2000-ம் ஆண்டு முதல் முறையாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய யுவராஜ் சிங் 11,778 ரன்களை சேர்த்துள்ளார்.

ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 148 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆட்டக்காரராக யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் போட்டிக்கு மிகப் பெரிய பங்காற்றியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

seithichurul

Trending

Exit mobile version