சினிமா செய்திகள்

’வென்று வா வீரர்களே’: யுவன்ஷங்கர் ராஜாவின் ஒலிம்பிக் பாடல்

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்தியா உள்பட பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான வீரர்கள் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட போதிலும் இப்போதைக்கு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு என்பவர் பெற்ற வெள்ளிப்பதக்கம் மட்டுமே இந்தியாவின் பதக்க பட்டியல் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ’வென்று வா வீரர்களே’ என்ற பாடல் ஒன்றை கம்போஸ் செய்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒரு சில பாடல்களை கம்போஸ் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பகுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தற்போது யுவன் சங்கர் ராஜாவும் அதேபோன்ற பாடலை பதிவு செய்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளதாகவும் எழுச்சி பெறும் வகையில் உள்ளதாகவும் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version