தமிழ்நாடு

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் அதிரடி

Published

on

யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளான நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு செய்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற போது மாரிதாஸ் மீது 5 பிரிவுகளின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு செல்லாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாரிதாஸ் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவர் உடனே விடுதலை செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version