Connect with us

இந்தியா

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்த யூடியூபர்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை

Published

on

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம் வீடியோக்கள் எடுத்ததாக தெரிகிறது. அதன்பின் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூரி ஜெகன்நாதர் கோயில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில் என்பதும் இந்த கோவிலில் ட்ரோன் மூலம் படம் எடுக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்காலி யூடியூபர் ஒரு வாரம் பூரி ஜெகநாதர் கோயிலை தனது குழுவினருடன் சேர்ந்து ட்ரோன் வீடியோ எடுத்து அதனை யூட்யூபில் பதிவு செய்துள்ளார். அனிமேஷ் சக்கரவர்த்தி என்ற அந்த நபர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியபோது பூரி ஜெகந்நாதர் கோவில் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என்றும் இதனை அடுத்து விதிகளில் சில மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்து இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பூரி ஜெகநாதர் கோவில் என்பது உலகப் புகழ்பெற்ற கோயில் என்பதால் அதன் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த கோயிலின் மேல் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!