தமிழ்நாடு

ஆபாசமாக பேசியது என்னுடைய குரல் அல்ல, நிரூபிக்க தயாரா? மதன் மனைவி கிருத்திகா ஆவேசம்!

Published

on

யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும், முறைகேடுகள் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் பப்ஜி மதன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் சற்று முன் வெளியான தகவலின் படி மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மதன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவில்லை என்றும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கவில்லை என்றும் அவரது மனைவி கிருத்திகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது கணவர் மதன் வீடுகள் கார்கள் போன்ற சொத்துக்களை வாங்கிக் குவிக்கவில்லை என்றும், யூடியூப் சேனலில் 20 மணி நேரம் கஷ்டப்பட்டு வேலை பார்த்து எனது கணவர் சம்பாதித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களிடம் ஒரே ஒரு ஆடி கார் தான் உள்ளது என்றும் அதுவும் சொகுசு கார் இல்லை என்றும், போலீசார் கைப்பற்றிய ஏ8 கார் யாருடையது என்று எங்களுக்கு தெரியாது என்றும் போலீசார் 2 கார்களை கைப்பற்றியதாக கூறியிருப்பதும் தவறான தகவல் என்றும் ஏ6 என்ற ஒரு கார் மட்டுமே எங்களுடைய கார் என்றும் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

மேலும் யூடியூப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் குரல் என்னுடைய குரல் அல்ல என்றும் வேறு யாருடைய குரல் என்று தனக்கு தெரியாது என்றும் என்னுடைய குரல் என்று நிரூபிக்க தயாரா என்றும் ஆவேசமாக பேசினார்.

மேலும் மதனுடைய யூடியூப் சேனலின் அட்மின் நான் இல்லை என்றும் என்னுடைய வங்கிக் கணக்கு மட்டுமே அந்த யூடியூப் சேனலில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ள மதனின் மனைவி கிருத்திகாவின் இந்த ஆவேசமான பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version