இந்தியா
இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்!
இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், புதன்கிழமை ஒரு இணையக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள்.
இளைஞர்கள் இப்போது வேலையில்லாமல் இருப்பதைத் திசை திருப்பலாம். ஆனால் இது சிறிது காலத்திற்கு மட்டுமே முடியும்.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளைக் கூட பரப்பலாம். ஆனால், வேலைவாய்ப்பை உருவாக்க முயலாத வரையில் அதுவும் தோற்றுப்போகும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.