தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி.. பரிதாபம்!

Published

on

விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த விவகாரத்தில் தற்கொலை முயற்சி செய்த இளைஞர் பலியாகி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போதிய சோதனை செய்யாமல் ரத்தத்தை அந்த பெண்ணுக்கு ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version