கிரிக்கெட்
எனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்!
ஐபிஎல்-ல் தனக்கு இது கடைசி போட்டியல்ல என்று தல தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. முதல் முறையாக லீக் பட்டியின் போதே தோல்வியுற்று, பிளே ஆஃபுக்கு செல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறுகிறது.
இதற்காகப் பல முறை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர் என்றால் அது தல தோனி தான். இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் விளையாடும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் டாஸ் நிகழ்வுக்கு வந்த தோனியிடம், இதுதான் ஐபிஎல்-ல் உங்களது கடைசி போட்டியா என்று வர்ணனையாளர் டேனி மோரிசன் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த தல தோனி, ‘நிச்சயம் இல்லை’ என்று இரண்டே வார்த்தையில் பதி அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
அதை கேட்ட ரசிகர்கள், கண்டிப்பாக அடுத்த ஐபிஎல் சீசனில், கோப்பை வென்று சூப்பர் கிங்காகதான், தல தோனி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறிவருகின்றனர்.