Connect with us

இந்தியா

ஆதார் கை ரேகையை 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்? ஏன்? கட்டணம் எவ்வளவு? முழு விவரங்கள்!

Published

on

தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெரும் போது 5 வயது வரையில் பெற்றோர் கை ரேகை விவரங்களுடன் இருக்கும், பின்னர் 5 முதல் 15 வயது வரையில் ஒரு முறையும் 15 வயதுக்கு பிறகு ஒரு முறையும் ஆதார் பாயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் பயனர்கள் தங்களது பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கத் தனி நபர் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 70 வயதுக்கு பிறகு இப்படி பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இதை கட்டாயம் செய்ய வெண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.

கட்டணம் எவ்வளவு?

சிறுவர்களுக்கு இரண்டு முறை இலவசமாக ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க முடியும். ஆனால் விருப்பத்தின் பேரில் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆதார் கார்டு இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது. மேகாலயா, நாகாலாந்து மற்றும் லடாக் பகுதியில் குறிப்பிட்ட சில சதவீதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தமாக 24.2 லட்சம் நபர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 50 ஆயிரம் ஆதார் கார்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1.5 லட்சம் தபால் அலுவலகங்களிலும் ஆதார் கார்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் கார்டை கட்டாயம் பெற வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆதார் கார்டு வந்த பிறகு அரசு நலத் திட்டங்கள், பான் கார்டு போன்றவற்றில் உள்ள போலி பயனர்களுக்குக் கண்டறியப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வணிகம்5 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்6 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை7 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு19 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்19 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024