இந்தியா

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

Published

on

மேற்கத்திய நாடுகளில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது சாதாரண ஒன்று. ஆனால் நம்மூரில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது என்று காம உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இப்படி ஒரு சம்பவம் சென்ற வாரம் டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்தேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மெட்ரோல் ரயிலில் அதிகம் பயணிக்கும் ஒரு நகரம் டெல்லி. அதில் நிறைய காதல் ஜோடிகளும் பயணிப்பார்கள். அப்படிதான் சென்ற வாரம் ரயிலில் பயணித்த இளம் காதல் ஜோடி இருவர் மார்டன் பேர்வழிகள். பார்ப்பதற்கு பெரும் வீட்டு பிள்ளைகள் போன்று இருந்த அவர்கள் திடீரென உதட்டில் முத்தம் கொடுக்க தொடங்கிவிட்டார்.

ஏதோ காதல் உணர்ச்சியில் தெரியாமல் செய்கிறார்கள் என்று பார்த்தால், திரைப்படங்களில் பார்ப்பது போன்று நீண்ட நேரம் முத்தம் கொடுத்திருந்துள்ளனர்.

அதை பார்த்த ஆண்கள், பெண்கள் மற்றும் ரயில் பயணிகள் முகம் சுளிக்க ஒருவர் மொபைலில் வீடியோவாக பதிவேற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த மக்கள் நாடு எங்கே போய்க்கொண்டு உள்ளது என்று புலம்பல்களைக் கொட்ட ஆரம்பித்துள்ளனர். சிலர் காரசாரமாக விமர்சித்தும் வருகின்றனர்.

ஆனால், இப்படி டெல்லி மெட்ரோவில் நடைபெறுவது முதல் முறையல்ல. பல முறை நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version