சினிமா செய்திகள்

இன்று சீமந்தம்… நேற்று மாலையிலேயே பிறந்த குழந்தை!- ‘அப்பா’ ஆனார் யோகி பாபு

Published

on

பிரபல தமிழ் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் யோகி பாபுவுக்கு பார்கவி என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திரைத்துறை நண்பர்களுக்காக திருமண வரவேற்பு நடத்தும் முன்னர் கொரோனா ஊரடங்கு காலம் வந்துவிட்டது. இதனால் மனைவி பார்கவியின் சீமந்த விழாவை பிரம்மாண்டமாக இன்று டிசம்பர் 29-ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், நேற்று மாலையிலேயே பார்கவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு நேற்றே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. விழா எடுக்க முடியாத கவலை இருந்தாலும் அப்பா ஆனதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் யோகி பாபு.

author avatar
seithichurul

Trending

Exit mobile version