உலகம்
அக்பருக்கு எதிராக ஆதித்யநாத் நடவடிக்கை.. அழகா இருந்த அலகாபாத்துக்கு புதுப்பெயர்!
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது.
ஆனால் ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் வைத்திருந்த சமஸ்கிருத ஆவணங்களில் எல்லாம் பிரயாகா என்ற பெயர் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்துத்துவா கொள்கை கொண்ட பலர், இந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்று அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அதன்படி தற்போது அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியுள்ளார். இதற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது.