தமிழ்நாடு
புத்தாண்டு விற்பனையை தாண்டி சாதனை செய்த ஊரடங்கு மதுவிற்பனை!
![tasmac - Bhoomitoday tasmac](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/tasmac.jpg)
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 144 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்த நிலையில் நேற்று அதை விட 70 கோடி ரூபாய் அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 218 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு முதல் முழு ஊரடங்கு ஆரம்பித்து விட்டது என்பதும் திங்கள் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என்பதால் இடைப்பட்ட நேரங்களில் மது வாங்க முடியாது என்ற காரணத்தினால் நேற்று மாலை முதலே மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்துனர்.
இதன் காரணமாக அனைத்து மதுக்கடைகளிலும் ஏராளமான கூட்டம் இருந்தது என்பதும் முண்டியடித்துக்கொண்டு மது பிரியர்கள் மதுவை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் இருந்து 248 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்றும் அதிகபட்சமாக சென்னையில் 50 கோடிக்கும், திருச்சியில் 42 கோடிக்கும், சேலத்தில் 40 கோடிக்கும், மதுரையில் 43 கோடிக்கும் கோவையில் நாற்பத்தி ஒரு கோடிக்கும் விற்பனை நடந்துள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் 147 கோடிக்கு மது விற்ற நிலையில் அதைவிட 71 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் ஞாயிறு அன்று டாஸ்மாக் மது கடைகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் தினம், வடலூர் வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களிலும் மது விற்பனை இருக்காது என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலும் இதே போன்ற சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.