வணிகம்

ரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி!

Published

on

யெஸ் வங்கி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நட்டத்திலிருந்து மீண்டு லாபம் பார்த்துள்ளது.
சென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் 600 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்த யெஸ் வங்கி, நடப்பு நிதியாண்டு அதிலிருந்து மீண்டு 129 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியதால் கடன் வழங்குவது குறைந்ததால், யெஸ் வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 9.7 சதவீதம் சரிந்து 1,973 கோடி ரூபாயாக உள்ளது.
யெஸ் வங்கியின் சென்ற நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 2,186 கோடி ரூபாய் வட்டி வருவாய் பெற்று இருந்தது.
வராக் கடனும் சென்ற ஆண்டு இருந்த 7.4 சதவீதத்திலிருந்து, அதிகரித்து 16.9 சதவீதமாக உள்ளது.
seithichurul

Trending

Exit mobile version