வணிகம்

இன்று முதல் இயல்பாகச் செயல்பட உள்ள யெஸ் வங்கி!

Published

on

யெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது.

இதனால், எங்கு யெஸ் வங்கி திவாலாகி விடுமே என்று பயந்தனர். யெஸ் வங்கி மறுசீரமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட ஆர்பிஐ, எஸ்பிஐ வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளிடமிருந்து நிதி பெற்றது. அதனால் யெஸ் வங்கியின் நிதி நிலை சீரமைக்கப்பட்டது.

எனவே, இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி இயல்பாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version