தமிழ்நாடு

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியதை அடுத்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கபப்ட்டிருந்த நிலையில் சற்றுமுன் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே மேற்கண்ட ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version