சினிமா

யாஷிகா எழுந்து நடக்க எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? – தயார் கூறிய அதிர்ச்சி தகவல்

Published

on

மாமல்லபுரம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் நடிகை யாஷிகா தான் காரை ஓட்டி வந்ததாகவும் அவர் அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து யாஷிகாவின் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரின் உடல் நிலை பற்றி தகவல் தெரிவித்த அவரின் தாய் ‘யாஷிகாவுக்கு இடும்பெலும்பு மற்றும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படவுள்ளது. அவர் எழுந்து நடக்க எப்படியும் இன்னும் 2 மாதங்கள் ஆகும். 3 மாதம் அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version