சினிமா செய்திகள்

படுத்த படுக்கை, பக்கத்தில் நாய்க்குட்டி: யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

Published

on

நடிகை யாஷிகா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் இருந்து காரில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென வந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும், அவரது 2 நண்பர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் வந்தார்கள் என்பது தெரிந்ததே.

மேலும் யாஷிகாவின் உடல் நிலை குறித்து அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், தனது தோழியின் மறைவு கேட்டு உருக்கமான பதிவு செய்து இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது உடல்நிலை குறித்த பதிவையும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் படுத்த படுக்கையில் இருப்பது போன்றும் பக்கத்தில் அவர் வளர்க்கும் நாய்க்குட்டி இருப்பது போன்றும் உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது யாஷிகா முன்பைவிட தற்போது கொஞ்சம் குணமாகி இருப்பதாகவும் விரைவில் அவர் எழுந்து நடமாடும் அளவுக்கு வந்து விடுவார் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version