சினிமா செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்: பிள்ளையார் சிலை முன் யாஷிகாவின் கவர்ச்சி லுக்!

Published

on

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சென்று பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இவர் தற்போது யோகி பாபுவுடன் சேர்ந்து ஸோம்பி படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படுபவர்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். யாஷிகா பல புகைப்படங்களை கவர்ச்சியாக வெளியிட்டிருந்தாலும் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் அவர் பிள்ளையார் சிலை முன்பு நின்று கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் பலரும் யாஷிகாவை விமர்சித்து வருகின்றனர். சாமி சிலை முன் இவ்வாறு தோற்றமளிக்கலாமா என கேள்வி கேட்டும், புகைப்படத்தை நீக்கும் படியும், கெட்ட வார்த்தைகளையும் பலர் பின்னூட்டமாக அதில் இட்டு வருகின்றனர். ஆனால் யாஷிகா தற்போது வரை அந்த புகைப்படத்தை நீக்கவில்லை.

Trending

Exit mobile version