சினிமா செய்திகள்

அரசியலுக்கு வருவேன் – யாஷிகா ஆனந்த் அதிரடி!

Published

on

ஜாம்பி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த், தான் நிச்சயமாக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு , யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், உள்ளிட்ட பலர் நடித்துள்ள கலகலப்பான பேய் படம் தான் ஜாம்பி. இப்படத்திற்க இசை காட்டேரி பிரேம்ஜி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய யாஷிகா ஆனந்த்,
“நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளேன். யோகி பாபு, கோபி, சுதாகர் என காமெடிக்கு பஞ்சமே இருக்காது. படத்தில் சில சண்டைக்காட்சிகளில் நானே ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். என் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த செய்தி அறிந்ததும் நான் எமோஷனல் ஆகிவிட்டேன். கோவை சென்றபோது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்தேன். மேலும் பேசிய அவர்
நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அதன்மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பிரம்ஜி இந்த படத்தில் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். இந்த படம் எனக்கு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Trending

Exit mobile version