சினிமா

5 மாசம் நடக்கவோ நிற்கவோ முடியாது…எல்லாமே பெட்டில்தான்… யாஷிகா ஆனந்த் பதிவு….

Published

on

நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு வார சிகிச்சைக்குபின் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது என்பது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது உடல் நிலை பற்றிய தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ என் இடுப்பு பகுதியில் பல எலும்பு முறிவுகளும் என வலது காலில் முறிவுவும் ஏற்பட்டுள்ளது. சில அறுவை சிகிச்சைகளுக்கு பின் ஓய்வு எடுத்து வருகிறேன். அடுத்த 5 மாதங்கள் என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. நாள் முழுவதும் பெட்டில்தன் இருக்கவேண்டும். உடல் உபாதைகளையும் அங்கேதான் கழிக்க வேண்டும்.

yashika

எந்த பக்கமும் அசைய முடியாது. என் பின்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை. இது கண்டிப்பாக எனக்கு மறுபிறவி. ஆனால், இந்த மறுபிறவியை நான் கேட்கவில்லை. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நான் காயமடைந்துள்ளேன். நான் செய்த தவறுக்கு கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிட்டு பார்த்தால் இது ஒன்றுமில்லை. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

yashika

Trending

Exit mobile version