டிவி

’பிக்பாஸ்’ பாலா உடன் நட்பில் இருக்கிறேனா?- ரசிகரின் கேள்விக்கு யாஷிகா ஆனந்த் பதில்!

Published

on

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனக்கும் பாலாஜி முருகதாஸ்-க்கும் உள்ள நட்புறவு குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்காகப் பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 2-ம் சீசன் மூலம் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தற்போது பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையைச் சார்ந்த இருவரும் தங்களது ஆரம்ப காலத்தில் இருந்தே நட்பில் இருந்துள்ளனர். விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யாஷிகாவின் ரசிகர் ஒருவர் பாலாஜி-க்கும் யாஷிகாவுக்கும் உள்ள நட்பு குறித்து யாஷிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா, “நானும் பாலஜியும் நண்பர்களாக இருந்தோம். இப்போது இல்லை. ஆனால், அவர் இன்று அடைந்திருக்கும் நிலைக்காக மகிழ்ச்சி கொள்கிறேன். காரணம், இதற்காக அவர் பல காலம் காத்திருந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version