சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு

Published

on

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கிறோம் என அருண்விஜய் நடித்த யானை படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோஷன் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஜூலை 1ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக யானை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

’விக்ரம்’ திரைப்படம் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் அந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

மேலும் ’யானை’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகிய மூவரும் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும்m, அவர்களது வாழ்த்துக்கள் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version