சினிமா செய்திகள்
சிம்பு-கெளதம் மேனன் படத்தில் இணைந்த ‘சர்கார்’ பட பிரபலம்!
சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
மேலும் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’சர்கார்’ உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜெயமோகன் வசனம் எழுத ஒப்புக் கொண்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பதும் அவரது வசனத்தில் இந்த படம் மெருகேறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கௌதம் மேனன் படத்தில் வழக்கமாக பாடல்கள் எழுதும் தாமரை இந்த படத்திற்கும் பாடல்கள் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான், கவுதம் மேனன், தாமரை, சிம்பு, ஜெயமோக, என முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.