தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருது பெற்ற இமையம், ஸ்டாலினுடன் சந்திப்பு!

Published

on

2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு இந்த விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு கிடைத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். செல்லாத பணம் என்ற நாவலை எழுதியதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாகித்ய அகடமி விருது பெற்ற இமையம் அவர்களுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் சாகித்ய அகாடமி விருது பெற்ற இமையம் அவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது குறித்து ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தனது எழுத்துக்களால் எளிய மக்களின் வாழ்வியலை அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்க படைப்பாளர் இமையம் அவர்களின் செல்லாத பணம் புதினத்திற்கு சாகித்ய அகடமி விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

இமையம் மற்றும் ஸ்டாலின் சந்தித்துக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version