இந்தியா
கேரளாவில் கொடூர வெள்ளம்.. 26 பேர் பலி.. 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை இப்போது தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு வாரமாக விடாது அங்கே பெய்து வருகிறது.
மலை ஓர மாவட்டங்கள் எல்லாம் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. பல வீடுகளில் வெள்ளம் மேல்தளம் வரை புகுந்து இருக்கிறது.
தொடர் மழையால் அங்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை மழை , வெள்ளத்தால் அங்கே 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தற்போது அங்கு மீட்பு பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. 10000 பேர் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.