கிரிக்கெட்

உலகக்கோப்பை டி20 போட்டி: இந்திய அணியில் திடீர் மாற்றம்!

Published

on

உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக வேறொரு வீரர் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பதும் அணியில் மாற்றம் செய்ய அக்டோபர் 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் உடல் நிலை குறித்த கேள்விகள் எழுந்ததால் அவருக்கு பதிலாக வெங்கடேச அய்யர் அல்லது ஆவேஷ்கான் நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக தற்போது அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்சர் பட்டேல், தீபக் சஹர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய மூவரும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் முழு விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி

 

seithichurul

Trending

Exit mobile version