கிரிக்கெட்

தல தோனி, இரண்டு தமிழர்கள்: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

Published

on

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், அயர்லாந்து, நியூசிலாந்து, பாபுநியூகினியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் மாற்றுவீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்

இந்தமுறை இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யார்க்கர் கிங் நடராஜன் அணியில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் தல தோனி இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் டி20 உலக கோப்பை இந்திய அணிக்காக வழிகாட்டியாக செயல்படுவார் என்றும் அவரது அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தல தோனி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது என்பதும் இந்தியாவுக்கான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10-ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறும் என்பதும் நவம்பர் 14ஆம் தேதி டி20 உலகக்கோப்பை சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version