கிரிக்கெட்

15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு: உலகக் கோப்பைக்கு இந்தியா தயார்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ஆம்தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள தங்கள் நாட்டு அணி வீரர்கள் தேர்வில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியா சார்பில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, விராட்கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகியுள்ளனர்.

நேற்று மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்ற ரிஷப் பந்துக்கு 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version