வேலைவாய்ப்பு

செயில் நிறுவனத்தில் வேலை: பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு!

Published

on

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உருக்கு ஆலை அமைத்துச் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஆலையில் மொத்த காலியிடங்கள் 205 உள்ளது. அதிகாரி மற்றும் அலுவலகப் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: ஜூனியர் மேனேஜர் – 7

வேலை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் – 170

வேலை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர் ஆபரேட்டர்) – 28

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் ஜூனியர் மேனேஜர் பணிக்கும், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பவர்பிளான்ட், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஒடியா மொழியறிவு பெற்றிருப்பது அவசியம்.

வயது: 4.12.2018 தேதியின்படி 28, 30 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம்: ஜூனியர் மேனேஜர் பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூ.500, டெக்னீசியன் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.sail.com இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 4.12.2018

 

seithichurul

Trending

Exit mobile version