வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை!
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குப் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்.
மொத்த காலியிடங்கள்: 60
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Assistant System Engineer
காலியிடங்கள்: 36
வேலை: Assistant System Analyst
காலியிடங்கள்: 24
மாதம் சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி,எம்பிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்கள் 35 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளைப் பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 22.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.02.2019