Connect with us

தமிழ்நாடு

முடிவுக்கு வருகிறது வொர்க் ஃப்ரம் ஹோம்: முன்னணி நிறுவனங்கள் அதிரடி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் அமலில் வந்த நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கிட்டதட்ட 50 சதவீத பொதுமக்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அப்படியே பாதிப்பு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில் பணி செய்துகொண்ட ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவின்கேர் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் செலவுகள் மீதமானதை கணக்கில் கொண்டு நிரந்தரமாகவே சில ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பல நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை பணிக்கு வரவழைக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஏற்கனவே 55 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டு இருப்பதால் விரைவில் முழுமையாக அலுவலகம் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதேபோல் இன்ஃபோசிஸ் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை அலுவலகம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

2025ம் ஆண்டு வரை வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நிலைப்பாட்டை எடுத்த டிசிஎஸ் நிறுவனம், தற்போது அந்த நிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் பணியாளர்களை அலுவலத்திற்கு வரவழைக்க ஏற்பாடு செய்து வருகிறது. 90 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தினால் தற்போது 50 சதவீதத்தினர் அலுவலகம் வர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 70 முதல் 80 சதவீதம் டிசிஎஸ் பணியாளர்கள் அலுவலகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து இருப்பது, மூன்றாம் அலையின் அறிகுறி இல்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக பல நிறுவனங்கள் தற்போது பணியாளர்களை வரவழைக்க தொடங்கிவிட்டார்கள். எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வொர்க் ஃப்ரம் ஹோம் இந்தியாவில் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!