தனியார் வேலைவாய்ப்பு
முடிவுக்கு வரும் Work From Home, ஐடி நிறுவனங்களின் திட்டம் என்ன?
கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஐடி நிறுவனங்களின் பெரும்பாலான பணிகள் Work From Home முறையின் கீழ் வீட்டிலிருந்தபடியே நடைபெற்று வந்தன.
இப்போது கோவிட்-19 தொற்று பரவல் குறைந்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. எனவே இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்தரா, விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை நிதானமாக அலுவலகம் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன.
எனவே பிரபல ஐடி நிறுவனங்கள் Work From Home முறையிலிருந்து எப்படி ஊழியர்களை அலுவலகம் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் வாரத்திற்கு 1 அல்லது 2 நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என முடிவெடுத்துள்ளது. தினமும் 40 முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வருவது போல திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 96 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெக் மஹிந்தரா
டெக் மஹிந்தரா ஊழியர்கள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இப்போது 18 சதவீத டெக் மஹிந்தரா ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்வதாகக் கூறுகின்றனர்.
விப்ரோ
விப்ரோ நிறுவனம் தங்களது மூத்த அதிகாரிகளை மார்ச் 3-ம் தேதி முதல் வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அலுவலகம் வரும் ஊழியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டு இருக்க வேண்டும்.
டிசிஎஸ்
இந்தியாவின் நம்பர் 1 ஐடி நிறுவனமான டிசிஎஸ், ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் விரிவான தொலைநிலை பணி கொள்கையை உருவாக்கியுள்ளது. அதன்படி 4-ல் 1 ஊழியர் அலுவலகம் தினமும் அலுவலகம் வரும் முடிவை டிசிஎஸ் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹெச்.சி.எல்
ஹெச்.சி.எல் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு Work From Home தொடரும் என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு ஹெச்.சி.எல் முக்கியத்துவம் அளிக்கிறது. முடிந்த வரை Work From Home மூலம் பணிகளைத் தடை இல்லாமல் தொடர முடிவு செய்துள்ளது.