தமிழ்நாடு

நகையை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை!

Published

on

நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில் பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு கட்டத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தனது 20 சவரன் நகைகளை அடமானம் வைத்து ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தார்.

இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தபோது ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து நகைகளை மீட்குமாறு கூறினார். ஆனால் நகைகளை மீட்காமல், அந்த பணத்தையும் அவர் ரம்மி ஆடியதாகவும் அது மட்டுமின்றி தனது சகோதரிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் கடன் பெற்றும் அந்த பணத்தையும் ரம்மியில் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பவானி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version