Connect with us

தமிழ்நாடு

கடனை திருப்பி கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய பெண்கள் கைது: சென்னையில் பரபரப்பு!

Published

on

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை ஆபாச படமெடுத்து மிரட்டிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தனது வீட்டில் குடியிருந்த பெண் ராதா என்பவருக்கு மூன்று லட்சம் கடன் கொடுத்துள்ளார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் வரை கடன் வாங்கிய ராதா, ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டார் .

இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த ராதா மீது பேராசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கும் ராதா ஆஜர் ஆகாத நிலையில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியரை தொடர்பு கொண்ட ராதா, உங்கள் பணத்தை திருப்பி கொடுக்கவுள்ளதாகவும், நான் கூறும் இடத்திற்கு வாருங்கள் என்று தனது தோழி லட்சுமி வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் பேராசிரியர் மயக்கமடைந்த நிலையில் அந்த பேராசிரியருடன் தோழி லட்சுமி தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த பேராசிரியரை அந்த ஆபாச படத்தை காட்டி கடனை திருப்பி கேட்க கூடாது என்றும் புகார் வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து பேராசிரியர் மீண்டும் போலீசாரிடம் மிரட்டியது குறித்து புகார் அளித்த நிலையில் ஆபாச படம் மிரட்டிய ராதா, லட்சுமி மற்றும் அவரது தோழிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!