உலகம்
தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த ஊழியர் நீக்கம்.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த பெண் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் நீதிமன்றம் சென்று முறையிட்டதில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு ஆண்டு சம்பளமாக சுமார் 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அந்த சலூனில் பல விஐபிகள் ரெகுலர் கஸ்டமர் என்பதாலும் சிகை அலங்காரம் உட்பட பல முக்கிய பணிகள் அந்த சலுவுனில் இருப்பதாலும் ஒவ்வொரு நாளும் விடுமுறை எடுக்காமல் வேலை செய்ய வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக திங்கட்கிழமைகளில் விடுமுறை எடுத்து வந்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக அந்த பெண்ணை வேலை நீக்கம் செய்தார். இதனை அடுத்து அந்த பெண் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணுக்கு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வழங்கி அந்த பெண்ணை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது அந்த பெண் தனது சக ஊழியர்களை விட அதிகம் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் விடுமுறை எடுப்பதாகவும் குறிப்பாக சனி ஞாயிறு என்ற வார விடுமுறையை அடுத்து பெரும்பாலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அவர் விடுமுறையை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த திங்கட்கிழமை அன்று மிகவும் முக்கிய நாளென்றும் அந்த நாளில் பல முக்கிய விஐபிகள் வருவார்கள் என்பதால் அவர் விடுமுறை எடுக்கக் கூடாது என்று வெள்ளிக்கிழமையே கூறப்பட்டிருந்ததாகவும் ஆனால் திடீரென தனக்கு வயிறு வலி ஏற்பட்டதால் திங்கட்கிழமை அவர் விடுமுறை எடுத்ததால் கோபம் அடைந்த உரிமையாளர் அவளை வேலை நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண்ணின் தரப்பினர் நீதிமன்றத்தில் கூறிய போது தனக்கு மாதவிடாய் நோய் ஏற்பதாகவும் வலி காரணமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்க நேர்ந்ததாகவும் கூறியதோடு அதற்குரிய மருத்துவ சான்றிதழையும் காண்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை கவனித்துக் கொள்வதற்காக அவருடைய மாமியாரும் அன்றைய தினம் விடுப்பு எடுத்து இருந்தார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உடல் நிலை குறைபாடு இருப்பதால் அவரது முதலாளி முறையான எச்சரிக்கை வழங்காமல் வேலையிலிருந்து நீக்கியது தவறு என்று கூறிய நீதிமன்றம் ரூபாய் 3 லட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.