உலகம்
உடலுறவுக்கு அழைத்தபோது ஆண் நண்பர் தூங்கியதால் வீட்டை கொளுத்திய பெண்!
அமெரிக்காவில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். அவர் அந்த நபரை உடலுறவுக்கு அழைத்த போது ஆண் நண்பர் வராமல் தூங்கியதால் வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
நியூ ஜெர்ஸியை சேர்ந்த தைஜா ரஸ்ஸெல் அந்த பகுதியை சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் தகாத உறவு வரை நீடித்துள்ளது. இவர்கள் அவ்வப்போது ஒன்றாக இருந்து உடலுறவு வைத்துக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் ஒன்றாக தங்கியுள்ளார். அப்போது இரவு தூங்கிகொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்க நள்ளிரவில் உடலுறவு கொள்ள ஆசை வந்துள்ளது.
இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த தனது ஆண் நண்பரை எழுப்பி உடலுறவு கொள்ள அழைத்துள்ளார். ஆனால் நல்ல தூக்கத்தில் இருந்த அந்த நண்பர் உடலுறவுக்கு மறுத்து மீண்டும் தூங்க சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்து மண்ணென்னையை எடுத்து வீட்டின் கூரையின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதனையடுத்து வீடு பற்றி எரிய அந்த ஆண் நண்பர் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு போலீசார் வந்து தீயை அணைத்து இது குறித்து விசாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும், சம்பவத்தின் போது அவர் உடலுறவுக்கு அழைத்து இவர் மறுத்ததால் வீட்டை கொளுத்தியதும் தெரியவந்தது.