இந்தியா

கணவருக்கு பெட் வேண்டும் என முதல்வர் அலுவலகம் முன் போராடிய பெண்!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இடமில்லை என்று கூறுவதாகவும் எனவே தனது கணவருக்கு பெட் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் இருக்கும் ஆம்புலன்சை கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் முன் நிறுத்திய அந்த பெண் தனது கணவருக்கு எப்படியாவது பெட் ஏற்பாடு செய்யுங்கள் என்றும் அதற்குரிய பணத்தை நான் உடனே கட்டி விடுகிறேன் என்று கெஞ்சி அழுது கொண்டிருந்தார்.

இதனை அடுத்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் அந்த பெண்ணின் கணவருக்கு உடனடியாக பெட் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் கொரோனாவால் பலியானார் என்பது சோகமான தகவல் ஆகும். முதல்வர் அலுவலகம் முன் தனது கணவருக்கு பெட் வேண்டும் என்று அந்தப் பெண் கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version