இந்தியா
கள்ளக்காதலனுடன் ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் கலந்த மனைவி!
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பித்தது.
இந்த நிலையில் ரெஸ்டாவுக்கு திடீரென இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனது கள்ள காதலனுடன் வீட்டை விட்டு ஓடுவதற்கு முடிவு செய்த ரெஸ்டா அதற்கு முன் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
சம்பவ தினத்தன்று கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்து சாப்பிட வைத்தார். அந்த சாப்பாட்டை சாப்பிட்ட கணவன் மயங்கி விழுந்த நிலையில் வெளியே தயாராக காத்திருந்த கள்ளக்காதலன் ரெஸ்டாவின் கணவரை அடித்துக் கொலை செய்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது சாம்பாரில் விஷம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ஊரை விட்டு ஓடுவதற்கு தயாராக இருந்த கள்ளக்காதலர்களை காவலர்கள் பிடித்து விசாரணை செய்ததில் சாம்பாரில் விஷம் கலந்ததை ரெஸ்டா ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.