தமிழ்நாடு

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

மசோதா வாபஸ்

சென்னையில் இன்று நடைபெற்ற மே தின சிறப்பு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” 12 மணிநேர பணி மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவித்தோம். இந்த 12 மணி நேர பணி மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன்” என முதல்வர் தெரிவித்தார்.

மே தின விழா

ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் எனில், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான் என முதல்வர் கூறினார். முன்னதாக தொழிலாளர் தினம் இன்று நாடு முழுவதிலும் கொண்டாப்படுவதை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சருடன், திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version