தமிழ்நாடு
சமூக வலைதளங்களில் கவுசல்யாவிற்கு குவியும் வாழ்த்து!
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
சாதி ஆணவ படுகொலையால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு கவுசல்யா நீதி மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.