தமிழ்நாடு
தேமுதிகவுடன் மநீம கூட்டணியா? கமல்ஹாசன் சூசாக பதில்!
தூத்துக்குடி: தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பான தலைவராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாறியுள்ளார். நேற்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் பேட்டியில், எனக்கு வாழ்த்து கூறிய நண்பர் ரஜினிகாந்திற்கு நன்றி. எனக்கு அவர் கூறியது வாழ்த்துதான். அதை ஆதரவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆதரவு அவர் இனிமேல்தான் தர வேண்டும்.
தேமுதிகவுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதுவரை நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. சென்னை சென்ற பின் இதுகுறித்து பேசவோம், என்று தேமுதிக உடனான கூட்டணி குறித்தது கமல்ஹாசன் குறிப்பிட்டார்.