வணிகம்
மேஹூல் சோக்ஷியின் ஆண்டிகுவா குடியுரிமை பறிக்கப்படும்!
WATCH : Snippet from my speech in Lok Sabha today. Urged the central govt to pay attention to Tamil Nadu's needs and to solve our water problems. pic.twitter.com/4McxdM8uZ5
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) June 25, 2019
ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, மேஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஷி உள்ளிட்டவர்கள் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நீரவ் மோடி லண்டலினில் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. மேஹூல் சோக்ஷியும் ஆண்டிகுவா குடியுரிமை பெற்று அங்குச் சென்றார்.
இந்நிலையில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, “நிதி குற்றங்கள் செய்துவிட்டு ஆண்டிகுவா வருபவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், மெஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் மேஹூல் சோக்ஷியின் ஆண்டிகுவா குடியுரிமை பறிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.