தமிழ்நாடு
‘தொகுதி பிரச்னைய தீர்க்க Guarantee கையெழுத்து போட்டு கொடுப்பேன்!’- கமல் அதிரடி பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர், ‘தொகுதிகளின் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்பதற்கு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரப்படும்’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாம் ஆட்சியைப் பிடித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதை ஆணவத்தோடு சொல்லவில்லை. மக்கள் தரும் நம்பிக்கையில் சொல்கிறேன். நேர்மைதான் எங்களது கொள்கை. எனது வாழ்க்கையே அதற்கு சான்று. காந்தியைப் போன்று எனது வாழ்நாள்தான் எனது செய்தி. இனியும் எனது வாழ்க்கையை நேர்மையாகத்தான் நடத்துவேன்.
சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் பிரச்சனையை கண்டிப்பா தீர்ப்பேன் என்று எழுதி கொடுப்பார். அதற்கு உத்திரவாதக் கையெழுத்து நான் போடுவேன்- தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள். #எதுவும்_தடையல்ல#சீரமைப்போம்_தமிழகத்தை pic.twitter.com/kb7dpF5yZL
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 15, 2020
எனது கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுபவர்களிடம், தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளைப் பட்டியலிட சொல்லியிருக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் பிரச்சனையை கண்டிப்பாக தீர்ப்பேன் என்று எழுதி கொடுப்பார். அதற்கு உத்திரவாதக் கையெழுத்தை நான் போடுவேன். இப்படியும் அரசியல் செய்யலாம் என்பதற்கு மய்யம் கட்சியின் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக இருப்பார்கள்’ என்று கூறினார்.