தமிழ்நாடு

#SasikalaReturns – அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன் – எடப்பாடி & கோவுக்கு சசிகலாவின் எச்சரிக்கை!!!

Published

on

பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா, ‘அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்’ என்று பேசியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ‘கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்.

அவசரமாக அம்மா நினைவிடம் மூடப்பட்டது எதை காட்டுகிறது என்பது மக்களுக்கு புரியும். தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த போது, ‘அதிமுகவை நீங்கள் கைப்பற்றுவீர்களா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போது விரிவாக பேசலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version