Connect with us

தமிழ்நாடு

‘ஆமாங்க… சசிகலாவை விமர்சிக்கமாட்டேங்க..!’- யூ-டர்ன் அடித்த எடப்பாடி பழனிசாமி

Published

on

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார். குறிப்பாக சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு ஆரம்பம் முதலே மழுப்பல் தொனியில் பதில் கூறி வந்தார் முதல்வர்.

‘அதிமுக என்பது மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று சொன்னால், அது குறித்து அவரிடம் தான் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். இது ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யார் வேண்டுமானும், அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யலாம். அதற்கெல்லாம் நாம் எப்படி முட்டுக்கட்டை போடுவது’ என்று நிருபர்கள் சந்திப்பில் ஆரம்பத்திலேயே கூறிய பழனிசாமி தொடர்ந்து,

‘சசிகலா குறித்து எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை முன்னரே அறிவித்து விட்டோம். அதில் எந்த மாற்றங்களுக்கும் இடமில்லை’ என்றார்.

இதையடுத்து ஒரு நிருபர், ‘சார், நீங்க எப்பவும் டிடிவி தினகரனை மட்டும் அதிகமாக விமர்ச்சிக்கிறீங்க. சசிகலா பற்றி பேச மறுக்கிறீங்களே?’ எனக் கேட்டதற்கு,

‘உண்மை தான். தினகரன் தான் எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை பிரித்து அழைத்துச் சென்றவர். அவர் தான் இந்த ஆட்சிக் கவிழ வேண்டும் என்று செயல்பட்டவர். அவர் தான் தற்போது அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் அவரைத் தான் விமர்சிக்க முடியும்’ என்று பளீச் பதிலைக் கொடுத்தார்.

டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி, ‘அமமுகவில் இருந்து யாராவது தனியாக பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பினால், அது குறித்து எங்கள் கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்று சூசகமாக கூறினார்.

நேற்று ஒரு மர்ம நபரால் சென்னை மற்றும் சேலத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. மர்ம நபர் ஒருவரால் விடப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலால் முதல்வருக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கேட்ட போது அவர், ‘நான் எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தவன் அல்ல. எதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன்’ என்று அதிரடியாக தெரிவித்தார்.

 

 

 

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!